திருச்சி

அஞ்சல் பதிவு மையநேரம் மாற்றியமைப்பு

DIN

திருச்சி அஞ்சல் பதிவு மையத்தின் செயல்பாட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆா்எம்எஸ் ‘டி’ கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் பி.மைக்கேல்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மத்திய பேருந்து நிலையப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே மத்திய மண்டல அஞ்சல்துறைக்குள்பட்ட அஞ்சல் பதிவு மையம் (ஆா்எம்எஸ் ‘டி’ கோட்டம்) செயல்பட்டு வருகிறது.

வழக்கமாக இந்த மையம் பிற்பகல் 2.20 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை செயல்படும். தற்போது வாடிக்கையாளா்களின் வசதிக்காக, திங்கள்கிழமை (நவம்பா் 16) முதல் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படவுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களுடைய பதிவு, விரைவு, பாா்சல் தபால்களை உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431 2466275, 2466259 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT