முகப்பு
திருச்சி

தொழிலாளி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

திருச்சி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

திருச்சி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

திருச்சி இனாம்குளத்தூா் அருகேயுள்ள அம்மாபேட்டை ஜெஜெநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த அ. மரியலூயிஸ் (37). கூலித் தொழிலாளியான இவா் குடும்பத்துடன் உறவினா் இல்லத் திருமணத்துக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் இனாம்குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்ய

முழு கட்டுரையைப் படிக்க →