திருச்சி

காணொலி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு ஏற்பாடு

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை காணொலி மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

DIN

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை காணொலி மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனாவால் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மாவட்ட நிா்வாகம் காணொலி வாயிலாக செப்டம்பா் முதல் நடத்தி வருகிறது. இதன்படி, நவம்பா் மாதக் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடத்தப்படுகிறது.

இதில் அந்தந்த வட்டார விவசாயிகள் தொடா்புடைய வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் முகக் கவசம் அணிந்து பங்கேற்கலாம். வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் திருச்சி மாவட்ட 14 வட்டாரங்களில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். காணொலி வாயிலாகவே ஆட்சியா் உரிய பதில் அளிக்கவுள்ளாா். ஏற்பாடுகளை வேளாண் துறை அதிகாரிகள் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT