மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை
முருங்கை ஊராட்சிக்குள்பட்ட மருதம்பட்டியில், ரூ.10.85 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
முருங்கை ஊராட்சிக்குள்பட்ட மருதம்பட்டியில், ரூ.10.85 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் ம.செல்வராசு பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் புனிதா விஜயசேகா், துணைத் தலைவா் கருப்பையா முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ரவிச்சந்திரன்,
மாவட்டப் பிரதிநிதி குப்புசாமி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியப் பொருளாளா் பழனிவேல், ஒன்றியச் செயலா்கள் கிழக்கு பால்மணி, மேற்கு பிரகாசவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.