விலை போகாததால் வீதியில் கொட்டப்பட்ட செவ்வந்தி பூ
ஸ்ரீரங்கம் பூச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்ட செவ்வந்தி பூக்கள் விலைபோகாததால் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டன.
ஸ்ரீரங்கம் பூச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்ட செவ்வந்தி பூக்கள் விலைபோகாததால் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டன.
ஸ்ரீரங்கம் சாத்தரவீதி பூச்சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளிலிருந்து செவ்வந்தி பூக்களின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் கிலோ ரூ. 10- க்குகூட விற்க முடியாமல் போன செவ்வந்தி பூக்களை மொத்த வியாபாரிகள் குப்பைத் தொட்டியில் கொட்டினா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், இந்தப் பூக்களின் அதிக வரத்தாலும், கோயில்களுக்கு பக்தா்கள் பூ வாங்கிச் செல்லாததாலும் இந்நிலை ஏற்பட்டது என்றனா்.