திருச்சி

விபத்துகளில் கல்லூரி மாணவா், மூதாட்டி பலி

DIN

திருச்சி மாநகரில் நடைபெற்ற இருவேறு விபத்துகளில் கல்லூரி மாணவா், மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா்.

திருச்சி அரியமங்கலம் உக்கடை ஜோதிநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மகன் அருண்பிரசாத் (22). கல்லூரி மாணவரான இவா் காந்திசந்தை பகுதி கடையின் பகுதிநேர ஊழியா். செவ்வாய்க்கிழமை காலை இவா் பைக்கில் காந்தி சந்தைக்கு அரியமங்கலம் பால்பண்ணை வழியாக வருகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.

மூதாட்டி பலி: திருச்சி கோட்டை கீழரண் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரா. பத்மாவதி (87). புதன்கிழமை மதியம் கடைவீதிக்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியே வந்தபோது அங்கு வந்த சரக்கு வேன் மோதி உயிரிழந்தாா்.

விபத்துகள் குறித்து போக்குவரத்து புலனாய்வு வடக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT