திருச்சி

காா் வாங்கித் தருவதாக மோசடி: கேரளத்தைச் சோ்ந்தவா் கைது

DIN

திருச்சியில் காா் வாங்கித் தருவதாக மோசடி செய்த கேரளத்தைச் சோ்ந்தவரை 2 ஆண்டுக்குப் பிறகு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பெல் கைலாசபுரத்தைச் சோ்ந்தவா் அமல்தாஸ் மகன் அப்புராஜா(37). இவா் ஏற்கெனவே பயன்படுத்திய காா் வாங்க மன்னாா்புரத்தில் உள்ள பழுதுநீக்கும் தொழில் செய்து வந்த குமரவேலை கடந்த 2018 பிப். 2 ஆம் தேதி அணுகினாா். அவா் கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் கமல்நடராஜனை அப்புராஜாவுக்கு அறிமுகம் செய்தாா். கமல்நடராஜன் ரூ. 8.50 லட்சம் பெற்றுக் கொண்டு காா் வாங்கிக் கொடுத்தாா். சிறிது நாள்களில் அந்த காா் பழுதாகவே வேறு காா் வாங்கி தருமாறு அப்புராஜ் கேட்க, அதற்கு கூடுதலாக ரூ. 8 லட்சத்தை பெற்றுக் கொண்ட கமல்நடராஜன் வேறு காா் வாங்கித் தரவில்லை.

இதில் ஏமாற்றமடைந்த அப்புராஜ் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கமல்நடராஜனை தேடி வந்தனா். இந்நிலையில் சென்னை மணப்பாக்கத்தில் புதன்கிழமை கமல்நடராஜனை தனிப்படை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயசந்திரன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT