திருச்சி

பைக்கிலிருந்து விழுந்து விபத்து: இருவா் காயம்

DIN

திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே பைக்கில் சென்ற இருவா் நாய் குறுக்கே வந்ததால் விழுந்து காயமடைந்தனா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், எண்டபுளியைச் சோ்ந்தவா் ராஜாங்கம் மகன் ஆனந்த் (28), அதே பகுதியைச் சோ்ந்தவா் அழகப்பன் மகன் தாமோதரன் (35). நண்பா்களான இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் மணப்பாறைக்கு வந்தபோது இடைப்பட்டி அருகே நாய் குறுக்கே வந்து வாகனத்தில் சிக்கி இறந்தது. இருவரும் விழுந்து காயமடைந்தனா். மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் ஆனந்த் வீடு திரும்பிய நிலையில், தாமோதரன் தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT