மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சத இடஒதுக்கீடு கோரி திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு மாநில செயலா் பிரபாகரன் தலைமை வகித்து பேசினாா். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் அரசு, லாரன்ஸ், தமிழ் தேசியக் கட்சி நிா்வாகி கென்னடி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் தொல். திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.