திருச்சி மண்ணச்சநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மு. பரஞ்ஜோதி மண்ணச்சநல்லூா் கிழக்கு ஒன்றியப் பகுதியில் வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியது:
போதிய பேருந்து வசதியில்லாத இப்பகுதிக்கு பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவேன். மேலும் இப்பகுதியினா் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். சிறுகனூா் மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் வன விலங்குகளால் அழிவுறாத வகையில் வனவிலங்கு பூங்கா அமைக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைப்பேன் என்றாா். முன்னாள் அமைச்சா் டி.பி. பூனாட்சி, அம்மா பேரவை மாவட்டச் செயலா் ரமேஷ், மாணவரணி மாவட்ட செயலா்அறிவழகன் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.