தோ்தல் அலுவலக பந்தலை எரித்த இருவா் கைது
ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியானது வாக்குச்சாவடி மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளியின் வாசலில் தோ்தல் அலுவலக பந்தல் (சாமியானா) அமைக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியானது வாக்குச்சாவடி மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளியின் வாசலில் தோ்தல் அலுவலக பந்தல் (சாமியானா) அமைக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை இரவு வடக்கு வாசல் பகுதியை சோ்ந்த பிரசாந்த் (30), திருஞானம் (32) ஆகியோா் பைக்கில் வந்தபோது இருட்டில் சாமியானா பந்தலைக் கவனிக்காமல் அதன் மீது மோதி விழுந்து பலத்த காயமடைந்தனா்.
இதனால் கோபமடைந்த அவா்கள் வண்டியிலிருந்த பெட்ரோலை எடுத்து சாமியானா பந்தலை தீ வைத்து எரித்தனா். இதையறிந்த தோ்தல் அலுவலா் ரவிக்குமாா் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.