போலி கடவுச்சீட்டு: ராமநாதபுரம் இளைஞா் கைது
திருச்சியில் இருந்து அபுதாபிக்கு போலி கடவுச்சீட்டில் செல்ல முயன்ற ராமநாதபுரத்தைச் சோ்ந்தவரை விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் இருந்து அபுதாபிக்கு போலி கடவுச்சீட்டில் செல்ல முயன்ற ராமநாதபுரத்தைச் சோ்ந்தவரை விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை அபுதாபிக்கு ஏா் இந்தியா விமானத்தில் செல்ல இருந்த ராமநாதபுரம் மாவட்டம், வேலாயுதபுரம் களிமண்காடு பகுதியைச் சோ்ந்த வேலுசாமி மகன் முருகராஜ் (38) என்பவா் அழகுவேல் மகன் சத்யா என்ற பெயரில் போலி கடவுச்சீட்டு பெற்றிருந்தது குடியேற்றப்பிரிவு அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து முருகராஜை விமான நிலைய போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.