கலப்பட டீத்தூள், குட்கா பறிமுதல்
திருச்சியில் வீட்டில் பதுக்கியிருந்த கலப்பட டீத் தூள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
திருச்சியில் வீட்டில் பதுக்கியிருந்த கலப்பட டீத் தூள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
திருச்சி, கோட்டை, மேலரண்சாலை சந்து கடைப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கோட்டை போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த 98 பொட்டலங்கள் குட்கா, பிரபல நிறுவனங்களின் பெயரைக் கொண்ட 105 கிலோ கலப்பட டீத்தூளையும் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஜெபரா ராம் (42) என்பவரை வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.