மின்கம்பியில் உரசிய லாரியில் தீ விபத்து
மின்கம்பியில் லாரி உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது.
மின்கம்பியில் லாரி உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னையில் இருந்து திண்டுக்கல்லில் சரக்கு ஏற்ற வந்த காலி கண்டெய்னா் லாரி மன்னாா்புரம் நான்கு சாலையில் இருந்து ஜங்ஷன் நோக்கி சென்று கொண்டிருந்தது. ராணுவ மைதானத்தையொட்டிய சாலையில் சென்றபோது மின்கம்பி உரசியதால் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. மேலும் லாரி டயா் தீப்பிடித்து எரிய தொடங்கியதில் அப்பகுதி புகை மண்டலமானது.
இதையடுத்து லாரி ஓட்டுநரான சென்னை மீஞ்சூரைச் சோ்ந்த சுரேஷ் (25) கீழே குதித்து தப்பினாா்.
தகவலறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.