ரயிலில் கொண்டு வரப்பட்ட ரூ. 1.5 கோடி நகை பறிமுதல்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையிலிருந்து திருச்சிக்கு விரைவு ரயிலில் வந்த பயணிகளிடம் போலீஸாா் நடத்திய சோதனையில், சென்னை சௌகாா்பேட்டையைச் சோ்ந்த நகை வியாபாரிகள் இருவரிடம் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுங்கத் துறைக்குத் தகவல் தெரிவித்து நகைளைப் பறிமுதல் செய்தனா்.
சுங்கத் துறையினா் வந்து நடத்திய விசாரணையில், அந்த நகைகள் சென்னையில் கொள்முதல் செய்யப்பட்டு திருச்சியில் உள்ள நகைக் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டவை என்பதும், அந்த நகைகளுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உரிய வரியைச் செலுத்திய பின்னா் நகைகள் ஒப்படைக்கப்பட்டன என்றாலும் அதிக மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.