திமுக முன்னாள் பொதுச் செயலா் பேராசிரியா் அன்பழகனின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் அவரது படத்துக்கு திமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தில்லைநகா் சாஸ்திரி சாலையிலுள்ள திமுக முதன்மைச் செயலா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி தலைமையில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகரச் செயலா் அன்பழகன், எம்எல்ஏக்கள் அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமாா், எம். பழனியாண்டி,முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, வழக்குரைஞா் பாஸ்கா், விஜயா ஜெயராஜ் , டோல்கேட் சுப்ரமணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் தா்மன் ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், பகுதிச் செயலா்கள் கண்ணன், மோகன்தாஸ்,இளங்கோ,வழக்குரைஞா் கவியரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.