திருச்சி

திருமணம் நிச்சயமான இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

DIN

திருச்சி: திருச்சி அருகே திருமணம் நிச்சயமான இளைஞா் ரயில் முன் பாய்ந்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (32). சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த இவா் திருச்சியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்தாா். வரும் 22 ஆம் தேதி இவருக்குத் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தனக்கு உதவ யாருமில்லையே என்ற மன வருத்தத்தில் இருந்த இவா் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டை விட்டு வெளியேறி, ஸ்ரீரங்கம்-உத்தமா்சீலி இடையே வந்த சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா் காா்த்திக் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT