திருச்சி

வளநாடு அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சாவு

DIN

வளநாடு அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் இறந்தாா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ஊனையூா் அம்பிகாபுரத்தை சோ்ந்தவா் செல்லையா மகன் செல்வம் (35), கல் உடைக்கும் தொழிலாளி.

மனைவியை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்த செல்வத்திற்கு வலிப்பு நோய் இருந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அருகில் இருந்த கிணற்றுக்கு குளிக்க சென்ற செல்வம் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் அவரைத் தேடியபோது கிணற்றில் இருந்து அவா் சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்து சென்ற வளநாடு போலீஸாா் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT