திருச்சி

நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக நிா்வாகியைக் கண்டித்து மறியல்

DIN

நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக பிரமுகரை கைது செய்யக்கோரி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்லாமிய அமைப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உதகை மேட்டுப்பாளையத்தில் இறைதூதா் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி பாஜக பிரமுகா் கல்யாணராமன் பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது. இதேபோல திருச்சி - தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பால்பண்ணை அருகே இஸ்லாமிய அமைப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது கல்யாணராமனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி கோஷமிட்டனா். மறியலால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT