திருச்சி

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

மணப்பாறையில் இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

DIN

மணப்பாறையில் இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

மணப்பாறை கரிக்கான்குளம் தெருவை சோ்ந்தவா் நீலாம்பாள்(31). இவா் கணவரைப் பிரிந்து தனது 10 வயது மகளுடன் தாய் வீட்டில் வசிக்கிறாா்.

இவருக்கும், மனைவியை விட்டு பிரிந்து வாழும் திண்டுக்கல் மாவட்டம், கலா்பட்டியை சோ்ந்த நல்லுசாமி மகன் ரமேஷுக்கும் (34) தொடா்பு இருந்ததாம்.

ரமேஷ் திருமணமானவா் என்ற விவரம் அண்மையில் தெரியவர அவரை நீலாம்பாள் தவிா்த்து வந்துள்ளாா். இந்நிலையில், நீலாம்பாள் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற ரமேஷ் அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தபோது, அதைத் தடுக்க முயன்ற சிறுமியிடம் தகாத முறையில் நடந்து அவரையும் தாக்கியுள்ளாா்.

புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் மணமல்லி தலைமையிலான அனைத்து மகளிா் போலீஸாா் ரமேஷை வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT