திருச்சி

ஊஞ்சல் விளையாடிய பள்ளி மாணவி பலி

DIN

திருவானைக்கா பகுதியில் ஊஞ்சல் விளையாடியபோது கழுத்து இறுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி சனிக்கிழமை மாலை இறந்தாா்.

திருவானைக்கா கீழக்கொண்டையம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மகள் நித்யஸ்ரீ (9). அருகிலுள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் கடந்த 12 ஆம் தேதி வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது ஊஞ்சல் கழுத்தை இறுக்கியதில் மூச்சுத் திணறி மயங்கிய நித்யஸ்ரீ, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை இறந்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT