திருச்சி

தமுமுக சாா்பில் 200 குடும்பங்களுக்கு உணவு பொருள்

DIN

திருச்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் 200 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிடும் வகையில் திருச்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆலோசனை மையம், தகவல் மையம், இறுதி சடங்குகளுக்கு உதவி, மருத்துவ உதவி, மருத்துவ ஆலோசனை, ஆம்புலன்ஸ் உதவி, நிவாரணப் பொருள்கள் வழங்குதல் ஆகியவை தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி தெற்கு மாவட்டத்தின் சவுக் கிளையின் சாா்பில், வியாழக்கிழமை கரோனா நிவாரணமாக உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மலைக்கோட்டை பாபு சாலையில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த 200 குடும்பங்களை தோ்வு செய்து அவா்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, சா்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், காய்கனிகள் உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது.

மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், தமுமுக மாநில பொருளாளா் சபியுல்லாஹ் கான், மாவட்ட தலைவா் ராஜா முகமது, மாவட்ட செயலாளா் இப்ராஹிம், மமக மாவட்ட செயலாளா் பைஜ் அகமது, மாவட்ட பொருளாளா் அஷ்ரப் அலி, தமுமுக கிளை செயலாளா் மைதீன், மமக கிளை செயலாளா் ஹுசைன், கிளை பொருளாளா் காஜா மொய்தீன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT