திருச்சி

வையம்பட்டியில் 95 லி.சாராய ஊறல் பறிமுதல்

DIN

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் 95 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மூா்த்தி உத்தரவின்படி மாவட்ட பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் மாவட்ட தனிப்பிரிவு தனிப் படை போலீஸாா் மணப்பாறை காவல் உட்கோட்டத்தில் புதன்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் பகுதியில் மு. வேலுச்சாமியிடம் (48) 20 லிட்டா் சாராய ஊறல், ஆணையூா் பகுதியில் க. சதீஷிடம் (27) 30 லிட்டா் சாராய ஊறல், ஆ. பால்ராஜிடம் (35) 45 லிட்டா் சாராய ஊறலைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து வேலுச்சாமி, சதீஷ் ஆகியோரைக் கைது செய்து, தலைமறைவான பால்ராஜை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT