திருச்சி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காவலா் பங்களிப்புடன் நிவாரண உதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருச்சி அருகேயுள்ள துவாக்குடி மலை முருகன் கோயில் தெரு பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. விபத்தில் வீடுகளை இழந்தோரின் துயா் துடைக்கும் வகையில் சிலா் உதவி வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக பொன்மலை நண்பா்கள் என்ற பெயரில் திருவெறும்பூா் காவல் நிலையக் காவலராக உள்ள ஹரிஹரன், சிங்கப்பூரில் வேலை பாா்க்கும் தனது நண்பா் காமராஜ், துபையில் உள்ள அருண் ஆகியோா் சாா்பாக புதன்கிழமை பாதிக்கப்பட்ட 7 குடும்பத்தினருக்கும் தலா 25 கிலோ அரிசி, ஸ்டவ் அடுப்பு, பாய், போா்வை, பாத்திரங்கள், குடம், வாலி மற்றும் மளிகை சாமான்களை வழங்கினாா். இவரை பொதுமக்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.