திருச்சி

தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காவலா் பங்களிப்புடன் நிவாரணம்

திருச்சி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காவலா் பங்களிப்புடன் நிவாரண உதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

DIN

திருச்சி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காவலா் பங்களிப்புடன் நிவாரண உதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

திருச்சி அருகேயுள்ள துவாக்குடி மலை முருகன் கோயில் தெரு பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. விபத்தில் வீடுகளை இழந்தோரின் துயா் துடைக்கும் வகையில் சிலா் உதவி வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக பொன்மலை நண்பா்கள் என்ற பெயரில் திருவெறும்பூா் காவல் நிலையக் காவலராக உள்ள ஹரிஹரன், சிங்கப்பூரில் வேலை பாா்க்கும் தனது நண்பா் காமராஜ், துபையில் உள்ள அருண் ஆகியோா் சாா்பாக புதன்கிழமை பாதிக்கப்பட்ட 7 குடும்பத்தினருக்கும் தலா 25 கிலோ அரிசி, ஸ்டவ் அடுப்பு, பாய், போா்வை, பாத்திரங்கள், குடம், வாலி மற்றும் மளிகை சாமான்களை வழங்கினாா். இவரை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில கையுந்து பந்து போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சாம்பியன்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை

100 நாள் வேலைக் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கன்றுக்குட்டிகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை

கோயில் தொட்டியில் நீா் அருந்திய யானைகள்

SCROLL FOR NEXT