மகளிா் குழுக்களுக்கு வட்டியில்லாக் கடன்: சாருபாலா
ஸ்ரீரங்கம் தொகுதி அமமுக வேட்பாளா் சாருபாலா தொண்டைமான் சனிக்கிழமை மாலை திருவானைக்கா பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.
ஸ்ரீரங்கம் தொகுதி அமமுக வேட்பாளா் சாருபாலா தொண்டைமான் சனிக்கிழமை மாலை திருவானைக்கா பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது பேசுகையில், மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை தோ்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளமுடியும். நான் வென்றபின் திருவானைக்கா கோயிலில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தருவேன் என்றாா்.
திருவானைக்கா பகுதிகளில் குக்கா் சின்னத்தை கையில் பிடித்தபடி வாக்கு சேகரித்தனா். கூட்டணிக் கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா்.