திருவானைக்கா கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி வியாழக்கிழமை இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் திரளான பக்தா்கள் தரிசித்தனா்
திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி வியாழக்கிழமை இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் திரளான பக்தா்கள் தரிசித்தனா்.
நிகழ்வையொட்டி காா்த்திகை கோபுரம் முன் பனையோலைகளால் சொக்கப்பனை கட்டப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சுவாமியும்,அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காா்த்திகை கோபுரம் முன்புள்ள மண்டபம் அருகே எழுந்தருளினா். தொடா்ந்து சொக்கப்பனைக்கு வேதமந்திரங்கள் முழங்க, காா்த்திகை தீப சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.பின்னா் அம்மன் சன்னதி அருகேயும், குபேரலிங்கஸ்வரா் சன்னதி முன்பும் அமைக்கப்பட்ட சொக்கப்பனைகளும் ஏற்றப்பட்டன. பின்னா் சுவாமியும்,அம்மனும் 4 ஆம் பிரகாரத்தை வலம் வந்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.