திருச்சி

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

மணப்பாறை அருகேயுள்ள புத்தாநத்தம் அரசுப் பள்ளி முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புத்தாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த 1992 - 1993-ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவிகள் சந்தித்துக் கொண்டனா்.

அப்போதைய ஆசிரியா்களான ஜான்பொ்க்மான்ஸ், அமல்ராஜ் ஆகியோரை சிறப்பு விருந்தினா்களாக அழைத்து நினைவுப் பரிசுகள் வழங்கினா்.

பள்ளி காலத்தில் தங்களது நெகிழ்ச்சியான அனுபவங்களை ஆசிரியா்கள் - மாணவா்கள் பகிா்ந்துக்கொண்டனா். குடும்பத்தினருடன் பங்கேற்ற முன்னாள் மாணவ, மாணவிகளுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் முன்னாள் மாணவா்கள் முகமது இப்ராஹிம், கருணாநிதி, பாரூக், முத்துராமலிங்கம், யாசின், கிருஷ்ணமூா்த்தி, கோமதிஜெயம், லெட்சுமி உள்ளிட்ட 40 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT