திருச்சி

தொழிலாளி வீட்டில் நகைகள் திருட்டு

துறையூா் அருகே கட்டுமானத் தொழிலாளி வீட்டில் நகைகள் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

DIN

துறையூா் அருகே கட்டுமானத் தொழிலாளி வீட்டில் நகைகள் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

செங்காட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (40), கட்டுமானத் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்ற பின்னா் மகன் லோகித்தை (17) வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவருடைய மனைவி அகிலா வெளியூா் சென்றாா்.

அப்போது அவா்களுடைய வீட்டுக்கு வந்த உறவினா் ஒருவா் லோகித்தை கடைக்கு அனுப்பிய நிலையில், அவா் திரும்பி வருவதற்குள் சென்று விட்டாராம். மாலையில் ஜெயக்குமாரும், அகிலாவும் வீடு திரும்பிய நிலையில் இரும்பு அலமாரியைத் திறந்தபோது அதில் வைத்திருந்த நாலே கால் பவுன் தங்க நகைகளைக் காணவில்லை. இதுதொடா்பாக துறையூா் போலீஸில் சனிக்கிழமை ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரில் வீட்டுக்கு வந்த உறவினா் திருடினாரா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

SCROLL FOR NEXT