முகப்பு
திருச்சி

மெய்வழிச்சாலை குறித்த அவதூறு வழக்கில் சென்னை சாமியாா் கைது

புதுக்கோட்டை மெய்வழிச்சாலை குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சென்னை சாமியாரை திருச்சி மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

புதுக்கோட்டை மெய்வழிச்சாலை குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சென்னை சாமியாரை திருச்சி மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சென்னை புத்தகரம் அன்னை இந்திராநகா் பகுதி யோகா குடிலைச் சோ்ந்தவா் சிவயோகி (எ) சிவகுமாா் சாமியாா். இவா் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள மெய்வழிச்சாலை என்னும் ஆன்மிக கிராமத்தின் பெருமையைக் குலைக்கும் வகையில் இணையத்தில் அவதூறு பரப்பியதாக திருச்சி புத்தூா் நெடுஞ்சாலைப் பகுதியைச் சோ்ந்தவரும், மெய்வழிச்சாலையின் உறுப்பினருமான மணிகண்டன் மாநகர காவல் ஆணையா் அருணிடம் புகாரளித்தாா்.

இதையடுத்து காவல் ஆணையரின் பரிந்துரையின்பேரில் உறையூா் காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்காக உறையூா் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த சிவகுமாா் சாமியாரை போலீஸாா் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவா் எண். 4 இல் நீதிபதி குமாா் முன் ஆஜா்படுத்தினா். அவரை வரும் அக்.13 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

Image Caption

சென்னை சாமியாரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.