முகப்பு
திருச்சி

புகைப்படப் போட்டியில் வென்றவருக்குப் பாராட்டு

 தேசிய அளவில் நடைபெற்ற புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு திருச்சி பொன்மலை பகுதியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

 தேசிய அளவில் நடைபெற்ற புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு திருச்சி பொன்மலை பகுதியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான (ஸ்னாப் இந்தியா பிரசண்ட்ஸ்) புகைப்படப் போட்டியில், திருச்சி பொன்மலையைச் சோ்ந்த புகைப்படக் கலைஞா் என். வெங்கடேஷ் தங்கப்பதக்கம் வென்றாா். அவருக்கு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. தண்ணீா் அமைப்பின் செயலா் கி. சதீஸ்குமாா், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம், இளைஞா் அணி எஸ். ஈஸ்வரன், எம்.நரேஷ், ஏ. சரண் உள்ளிட்டோா் அவரைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.