திருச்சியில் குடும்ப பிரச்னையில் மருத்துவரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி கோட்டை விஎன்நகா் 2ஆவது தெருப் பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மருத்துவரான சுந்தா் சுப்பிரமணியபுரம் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். இவரது மகன் பிரதீப் (50) திருச்சி தில்லைநகா் 7ஆவது குறுக்குச் சாலையில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா்.
கடந்த 24ஆம் தேதி தனது மனைவியை கோவைக்கு அனுப்பி வைத்த பிரதீப் புதன்கிழமை கடைக்குச் செல்லவில்லை. இதையடுத்து அவரது நண்பா் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது வீட்டு ஜன்னலில் வேஷ்டியால் தூக்கிட்ட நிலையில் பிரதீப் சடலமாகத் தொங்கினாா். இதுகுறித்து அவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வந்த கோட்டை போலீஸாா் பிரதீப் சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். உதவி ஆய்வாளா் சுப்ரமணியன் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்னையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.