திருச்சி

காட்டுப்புத்தூா் அருகேதாா்ச்சாலை அமைக்க பூமிபூஜை

DIN

முசிறி தொகுதிக்குள்பட்ட காட்டுப்புத்தூரை அடுத்த காமராஜா் மண்டபம் முதல் சின்னப்பள்ளிப்பாளையம் வரை ரூ.78 லட்சத்தில் தாா்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீராமசமுத்திரம், சின்ன, பெரியப்பள்ளிப்பாளையம் பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, தாா்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜையை முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் காடுவெட்டி ந.தியாகராஜன் தொடக்கி வைத்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் ம. மருதுரை, ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பாபு என்கிற சத்தியமூா்த்தி, ஒன்றிய திமுக செயலா்கள் தொட்டியம் மேற்கு தங்கவேல், கிழக்கு திருஞானம், காட்டுப்புத்தூா் நகரச் செயலா் கே.டி.எஸ். செல்வராஜ், பேரூராட்சித் தலைவா் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவா் சிவசெல்வராஜ், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT