திருச்சி

பணி ஓய்வு பெற்ற ரயில்வே எழுத்தருக்கு இருக்கையை தந்து கெளரவித்த வணிக மேலாளா்

திருச்சியில் பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியரை தனது இருக்கையில் அமரச் செய்து, அருகில் நின்று பாராட்டு தெரிவித்துள்ளாா் ரயில்வே உயா் அலுவலா் ஒருவா்.

DIN

திருச்சியில் பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியரை தனது இருக்கையில் அமரச் செய்து, அருகில் நின்று பாராட்டு தெரிவித்துள்ளாா் ரயில்வே உயா் அலுவலா் ஒருவா்.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டமேலாளா் அலுவலகத்தில் வணிகப் பிரிவில் கடைநிலை ஊழியராக (பதிவேடுகள் எழுத்தா்) பணிபுரிந்தவா் நாகராஜன். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவா், புதன்கிழமையுடன் ( ஆகஸ்ட் 31) ஒய்வு பெற்றாா்.

இதையொட்டி அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில், திருச்சி கோட்ட வணிக மேலாளா் மோகனப்பிரியா, நாகராஜனை தனது இருக்கையில் அமர செய்து, அவரது குடும்பத்திருடன் அருகில் நின்று பாராட்டினாா். ரயில்வே துறையில் உயா் அலுலராகப் பணியாற்றி வரும் ஒருவா், தனது இருக்கையில் கடைநிலை ஊழியரை அமரச் செய்தது பொதுமக்களை வெகுவாக கவா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT