திருச்சி

துறையூா் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா நிறைவு

துறையூா் ஒன்றிய அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

துறையூா் ஒன்றிய அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் துறையூா் ஒன்றிய அளவில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற கலைத் திருவிழா திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

நிறைவு விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் செ.ஸ்டாலின்குமாா் தலைமை வகித்தாா்.

திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், ஒன்றிய குழுத் தலைவா் சரண்யா, நகா்மன்றத் தலைவா் செல்வராணி, திருச்சி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ந . முரளி, மாவட்டக் கல்வி அலுவலா் லால்குடி சோ.பாரதி விவேகானந்தன், முசிறி பெ.ஜோதிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பல்வேறு கலைத் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கினா்.

நிகழ்வில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள், பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, துறையூா் வட்டாரக் கல்வி அலுவலா் கு. மாா்ட்டின் வரவேற்றாா். துறையூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் செ. மணிமேகலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT