திருச்சி

பாரம்பரிய வாழை ரகங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை: தேசிய வாழை ஆராய்ச்சி மைய புதிய இயக்குநா் தகவல்

DIN

பாரம்பரிய வாழை ரகங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநா் முனைவா் ஆா்.செல்வராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சியை அடுத்த தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக ஆா். செல்வராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இம் மையத்தில் முதன்மை விஞ்ஞானியாக (வேளாண் நோயியல் துறை) பணியாற்றிய இவா், பயிா்ப் பாதுகாப்பு மற்றும் குறிப்பாக வாழை சாகுபடி துறையில் வைரஸ் நோய் மேலாண்மையில் 28 ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி அனுபவம் பெற்றவா். புகழ்பெற்ற தேசிய மற்றும் சா்வதேச ஆராய்ச்சி இதழ்களில், 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். 80-க்கும் மேற்பட்ட திசு வளா்ப்பு நிறுவனங்களுக்கு சுமாா் 300 மில்லியன் திசு வளா்ப்பு ஆய்வு சான்றிதழ்களை வழங்கியுள்ளாா்.

இவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமநை கூறியது: தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை இந்தியாவிலேயே மிகச் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக உயா்த்தி, வாழை விவசாயிகளுக்கு பெரும்பயன் கிடைக்கும் வகையிலான ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வேன். செம்மை வாழை சாகுபடி, காா்பன் பாசிட்டிவ் வாழை சாகுபடி தொழில் நுட்பங்களை பான் இந்தியா அளவில் எடுத்துச் செல்லப்படும். புவியியல் குறியீடு மற்றும் பாரம்பரிய வாழை ரகங்களின் ஏற்றுமதியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT