திருச்சி

முசிறியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார பேரணி

DIN

முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை ஒன்றியக் குழுத் தலைவா் மாலா ராமச்சந்திரன் தொடக்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகரன், ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வங்கி ஒருங்கிணைப்பாளா், சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநா், சமூக வள பயிற்றுனா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்று வன்முறை ஒழிப்பு குறித்த பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பியும் முசிறி வீதிகள் வழியே சென்றனா்.

தொடா்ந்து வட்டார இயக்க மேலாளா் வெண்ணிலா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் செல்வி ஆகியோா் பேசினா். பின்னா் உறுதிமொழியேற்றனா். வட்டார ஒருங்கிணைப்பாளா் பத்மா வரவேற்றாா், ஊராட்சி ஒன்றிய மேலாளா் சிவகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT