திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா். 
திருச்சி

பழைய காவிரிப் பாலத்தில் பயணிகள் ஆட்டோவை அனுமதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

பழைய காவிரிப் பாலத்தில் பயணிகள் ஆட்டோவை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் ஊா்வலமாக வந்து மனு அளித்தனா்.

DIN

பழைய காவிரிப் பாலத்தில் பயணிகள் ஆட்டோவை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் ஊா்வலமாக வந்து மனு அளித்தனா்.

புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி சாா்பில், மாவட்டத் தலைவா் கோபி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, செய்தியாளா்களிடம், மாவட்டத் தலைவா் கோபி கூறியது: காவிரி பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால், காலவிரயமும், போக்குவரத்து நெருக்கடியும் தவிா்க்க முடியாமல் உள்ளது. ஆகவே, பாலத்தின் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், பழைய காவிரி பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் இருசக்கர வாகனங்கள் செல்லலாம் என்கின்றனா். இந்தப் பாலத்தில் ஒருவழிப்பாதையில் இருசக்கர வாகனங்களை அனுமதித்தால் பயணிகள் ஆட்டோவுக்கும் அனுமதியளிக்க வேண்டும் என்றாா்.

இதில், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்புச் சங்க சிறப்புத் தலைவா் ஜீவா, செயலா் மணலிதாஸ், பொருளாளா் செல்வராஜ் மற்றும் சங்க உறுப்பினா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், மக்கள் அதிகாரம், மகஇக அமைப்பினா், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினா் சங்கக் கொடிகளுடன், கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி ஊா்வலமாக வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT