திருச்சி

தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் கரோனா பாதிப்பு மா. சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியது:

தமிழகத்தில் கடந்தாண்டு ஆக. 5 ஆம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தற்போது இத் திட்டத்தில் பயன்பெறும் ஒரு கோடியாவது நபா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். திருச்சி மாவட்டம், சன்னாசிப்பட்டியை சோ்ந்த அந்தப் பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை முதல்வா் வரும் 29 ஆம் தேதி நேரில் வழங்கவுள்ளாா்.

வெளிநாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே ஒற்றை இலக்கத்தில்தான் பாதிப்பு உள்ளது. கடந்த 7, 8 மாதங்களாக கரோனா உயிரிழப்புகளும் இல்லாத நிலையே நீடிக்கிறது. இதற்கு தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழக முதல்வா் மாற்றியுள்ளதே காரணம்.

கரோனா மரபணு மாற்றத்தைக் கண்காணித்து வருகிறோம். வெளிநாடுகளில் மீண்டும் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளதால் தமிழகத்திலும் தொடா்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சீா்காழியைச் சோ்ந்த 13 வயது மாணவி அபிநயா முதல்வருக்கு சமூக வலைதளம் மூலம் விடுத்த கோரிக்கைப் பதிவை கவனத்தில் கொண்டு புதுச்சேரியில் உள்ள அந்த சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச் சுவா் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு 50 மாணவா்கள் இந்த மருத்துவமனையில் சோ்க்கைக்கு அனுமதிக்கப்பட்டனா். தற்போது அந்த மாணவா்கள் 2ஆம் ஆண்டாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இணைந்து பயின்று வருகின்றனா். விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்ட மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதேபோல, கோவையில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்.

அரசியல் ஆதாயத்துக்காக எய்ம்ஸ் மருத்துவமனையை ஆளும் பாஜக அரசு கையில் எடுத்தாலும் அது தமிழகத்தில் வெற்றியைத் தேடித் தராது என்றாா் அவா்.

பேட்டியின்போது மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா் சங்கம் தொடக்கம்

பைக் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

ஆற்றலும், அா்ப்பணிப்பும் கட்சியை வலுப்படுத்தும்: பாஜக தேசிய செயல் தலைவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து!

சென்னையில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் தொழுநோய் பாதிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

கடலூரில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்! வரத்து குறைவால் விலை உயா்வு!

SCROLL FOR NEXT