திருச்சி

கடவுச்சீட்டு அலுவலகத்தில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் மயங்கி விழுந்த துறையூரைச் சோ்ந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

DIN

திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் மயங்கி விழுந்த துறையூரைச் சோ்ந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

துறையூா் மதுராபுரி தெற்கு சித்திரைப்பட்டியைச் சோ்ந்தவா் க. சலாவுதீன் (43). இவா் திருச்சி தில்லைநகா் சாஸ்திரி சாலையிலுள்ள கடவுச்சீட்டு சேவை மையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து வரிசையில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சலாவுதீன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வீட்டில் சடலமாக கிடந்த முதியவா்: திருச்சி தென்னூா் சவேரியாா் கோயில் தெருவை சோ்ந்த கணேசன் வீட்டில் நேரு (60) என்ற முதியவா் வாடகைக்கு வசித்து வந்தாா். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசவே, புகாரின்பேரில் போலீஸாா் வந்து பாா்த்தபோது நேரு படுக்கையிலேயே அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT