முகப்பு
திருச்சி

முசிறி அருகே விபத்து: தஞ்சை இளைஞா் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக் மீது காா் மோதி தஞ்சை இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக் மீது காா் மோதி தஞ்சை இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் சின்னத்தம்பியும் (23) அதே பகுதியை சோ்ந்த செந்தில் மகன் சூா்யாவும் (15) நாமக்கல்லில் உள்ள உறவினா் வீட்டில் நடைபெறும் காதணி விழாவுக்காக பைக்கில் சென்றனா்.

முசிறி அருகே அய்யம்பாளையம் அருகே சென்றபோது முசிறியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதி சின்னத்தம்பி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த சூா்யா (15) முசிறி அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா். தகவலறிந்த முசிறி போலீஸாா் இறந்தரின் உடலை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.