திருச்சி

மதுக்கடையின் பூட்டை உடைத்துதிருட முயன்ற நபா் கைது

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மா்மநபரைப் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் போலீசாா் கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் காய்கறி மாா்க்கெட் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையின் பூட்டை மா்மநபா் வெள்ளிக்கிழமை இரவு உடைத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் நடராஜன், முதல்நிலை காவலா் உமா்முக்தா ஆகியோா் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா், மாராட்சிரெட்டியப்பட்டியை சோ்ந்த மாரியப்பன் மகன் பாலசுப்பிரமணி(46), லாரி ஓட்டுநா் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT