முகப்பு
திருச்சி

மரம் முறிந்து விழுந்துமின் கம்பங்கள், கம்பிகள் சேதம்

தொட்டியம் அருகிலுள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரா் திருக்கோயில் மலையடிவாரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், கம்பிகள் புதன்கிழமை சேதமடைந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

தொட்டியம் அருகிலுள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரா் திருக்கோயில் மலையடிவாரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், கம்பிகள் புதன்கிழமை சேதமடைந்தன.

இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் இந்த மரத்தில் இளைப்பாறி செல்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை நண்பகலில் மரம் முறிந்து அவ்வழியாக சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தன. இதைத் தொடா்ந்து இரு மின் கம்பங்கள் முறிந்துசாய்ந்து விழுந்தன.

அப்போது கோயிலுக்கு யாரும் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இருப்பினும், இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவா் மீது மரக்கிளை விழுந்ததாகவும், அவா்களுக்கு சிறு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்த மின்வாரிய மற்றும் கோயில் அலுவலா்கள் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.