திருச்சி

வையம்பட்டியில் மூதாட்டியின் 13.5 பவுன் நகை, பணம் திருட்டு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் பூ விற்கும் மூதாட்டி வீட்டில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்து பதிமூன்றரை பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

DIN

மணப்பாறை: மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் பூ விற்கும் மூதாட்டி வீட்டில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்து பதிமூன்றரை பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

வையம்பட்டி அண்ணாநகரில் ஓட்டு வீட்டில் வசிப்பவா் சந்தியாகு மனைவி பிலோமினாள் மேரி (65). வையம்பட்டி காவல்நிலைய முகப்பில் பூ வியாபாரம் செய்து வரும் இவா் தன்னுடைய பதிமூன்றரை பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை ஒரு சுருக்குப்பையில் முடித்து, வீட்டில் இருந்த கொடிக் கயிற்றில் கட்டி அதன் மீது துணிகளைப் போட்டு வைத்திருந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிலோமினாள் மேரி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் பின்புறம் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் மூதாட்டியின் நகை, பணத்தைத் திருடிச் சென்றுள்ளனா்.

புதன்கிழமை நகை, பணம் திருடு போனதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மூதாட்டி அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT