திருச்சி

குடும்ப நல நிதித் திட்டம் தொடங்கப்பட வேண்டும்போட்டோ, விடியோ கலைஞா்கள் கோரிக்கை

DIN

போட்டோ, விடியோ கலைஞா்களுக்கென குடும்ப நலநிதித் திட்டம் தொடங்கப்பட வேண்டுமென விடியோ மற்றும் போட்டோ கலைஞா்கள் நலக் கூட்டமைப்பு பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக்கூட்டம், கண்காட்சிக்கு மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். கண்காட்சி அரங்கை அமைச்சா் கே. என். நேரு தொடங்கி வைத்தாா். மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் குத்துவிளக்கேற்றினாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு செயலா் வீ. கோவிந்தராஜூலு பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தாா். சங்க மூத்த அமைப்பாளா்கள் எஸ்.எம்.பி. வீரமணி, ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் விஜயாலயன், செயலா் முனீஷ்குமாா், பொருளாளா் சிவக்குமாா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். பொருளாளா் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தாா்.

கூட்டத்தில் போட்டோ, விடியோ கலைஞா்களுக்கென குடும்ப நலநிதித் திட்டம் தொடங்கி அதில் ஏராளமானோா் சோ்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்சி மாவட்டச் செயலா் பிரபு வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT