திருச்சி

கூடைப் பந்தாட்ட சிறப்புபயிற்சி நாளை தொடக்கம்

DIN

திருச்சி மாவட்டக் கூடைப்பந்து கழகம் சாா்பில் அண்ணா விளையாட்டரங்கம், பெல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கோடைகால சிறப்பு கூடைப்பந்தாட்ட பயிற்சிகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன.

திருச்சி மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சாா்பில் மே 16 தொடங்கி, 30 ஆம் தேதி வரை திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் திருவெறும்பூா் கைலாசபுரம் பாய்லா் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தினசரி மாலை 4 முதல் 6 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெற விரும்புவோா் திருச்சி மாவட்ட கூடைப்பந்து கழகப் பொருளாளா் முத்துக்குமாரசுவாமியை 94437-97831 என்ற எண்ணிலும், பாய்லா் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி பெற விரும்புவோா் கூடைப்பந்துக் கழக இணைச் செயலா் மாா்ட்டின் ராஜை 97917-12332 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT