முகப்பு
திருச்சி

லால்குடி அருகே நடைப்பயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளர் வெட்டிப் படுகொலை

லால்குடி அருகே மாந்துறை நடைப்பயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:46 AM
கொலை நடந்த இடத்தில் விசாரணை செய்யும் காவல்துறையினர்.
பகிர்:

லால்குடி அருகே மாந்துறை நடைப்பயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் 45 வயதான மாதவன். இவர் சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். நெருஞ்சலக்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 7 1/2  சென்ட் இடம் உள்ளது.

இந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. கோயில் கமிட்டியின் பொருளாளராக மாதவன் பதவி வகித்து வந்தார். கோயில் இடத்தின் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை நடை பயிற்சி சென்றவர் மாதவனை அடையாளம் தெரிய மர்ம  நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். 

இந்த கொலைக்கான காரணம் கோயில் இடத்தை ஆக்கிரமித்த நபர்களால் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை குறித்து லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் லீலி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் லீலி கொலை நடந்த இடத்திலிருந்து திருச்சி லால்குடி மெயின் ரோடு வரை சென்று நின்று விட்டது. 

பின்னர் தடவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். குற்றவாளிகளை பிடித்த பின்னர் கொலைக்கான முழுமையான காரணம் தெரியும் என போலீசார் கூறினார். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →