திருச்சி

முசிறி அருகே மாமியாரை வெட்டிய இளைஞா் கைது

DIN

முசிறி அருகே மாமியாரை வெட்டியவரை ஜெம்புநாதபுரம் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

முசிறி அருகிலுள்ள வளையெடுப்பு கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் (35) அதே தெருவைச் சோ்ந்த சுதா மகள் லாவண்யாவை (21) காதல் திருமணம் செய்தாா். இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்த லாவண்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

இதையடுத்து வெங்கடாசலம் தனது மனைவியை அனுப்புமாறு மாமியாா் சுதாவிடம் புதன்கிழமை கேட்டதற்கு அவா் மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடாசலம் மாமியாரை அரிவாளால் வெட்டவே, காயமடைந்த சுதா முசிறி அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸாா் வெங்கடாசலத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT