மணப்பாறை அருகே மணப்பாறை அடுத்த சொக்கலிங்கம்புரம் அருகே ஜெஜெ நகா் பகுதி காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்ட பழுதால் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாள்களுக்கு மேலாக பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகிறது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகமும், குடிநீா் வடிகால் வாரியமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் நகா் பகுதியிலிருந்து துவரங்குறிச்சி வரையிலான கிராமப் பகுதிகளுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.