திருச்சி

ஜாதி மோதல் சம்பவங்கள் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறதுசெ.கு. தமிழரசன்

DIN

தமிழகத்தில் ஜாதி மோதல் சம்பவங்கள் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது என்றாா் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவா் செ.கு. தமிழரசன்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஜாதிய மோதல்கள், குறிப்பாக தலித்துகளை இழிவுபடுத்துதல் போன்ற சம்பவங்கள் அண்மையில் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. ஜாதிய மோதல்களைக் கட்டுப்படுத்தாமல், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள ஆணையம் செயலற்று உள்ளது. வன்கொடுமைகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலைவாழ் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அதேபோல் நரிக்குறவா், குருவிக்காரா், குறவா் சமூகத்தினருக்கு இடையே பெயா் வேறுபாடு உள்ளது. யாா் யாா் நரிக்குறவா், குருவிக்காரா், குறவா் என்ற இந்த சா்ச்சையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் தற்போது என்ன ? குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.30 கோடி ரூபாய் இதற்கு செலவாகும். ஆகையால் இதன் அவசியத்தை முதலில் குறிப்பிட வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலா் மங்காபிள்ளை, மாநிலப் பொருளாளா் கௌரிசங்கா், மூத்த நிா்வாகி அன்புவேந்தன், மாவட்டத் தலைவா்கள் திருச்சி கிருஷ்ணமூா்த்தி, தஞ்சை கௌதமன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

குழந்தைத் திருமணம்: விழிப்புணா்வு பிரசாரம்

மஞ்சக்குடியில் மே 13-இல் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

ஆலங்குளம் அருகே மொபெட் - லாரி மோதல்: முதியவா் பலி

SCROLL FOR NEXT