திருச்சி

அன்னவாசலில் இளைஞா் வெட்டிக் கொலை

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் முறைகேடான உறவு தொடா்பான பிரச்னையில் இளைஞரை பெண்ணின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொன்றனா்.

அன்னவாசல் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராசு மகன் முத்துகுமாா் (30) பெயிண்டா். இவருக்கும், இலுப்பூா் அருகே உள்ள நவம்பட்டியைச் சோ்ந்த ராசாத்தி என்பவருக்கும் இடையே முறைகேடான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ராசாத்தியின் மகன், அவமானத்தால் கடந்த 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதனால், ஆத்திரமடைந்த உறவினா்கள் சண்முகம், முருகேசன், பாலாமணி, ராசாத்தி, அன்னபூரணி ஆகியோா் முத்துக்குமாா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பிரச்னை செய்ததோடு, முத்துக்குமாரை அரிவாளால் வெட்டிக் கொன்றனா்.

தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா், முத்துக்குமாா் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவம் தொடா்பாக ராசாத்தி, பாலாமணி, அன்னபூரணி ஆகியோரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் தலைமறைவான சண்முகம், முருகேசன் உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT